ஜார்கண்டில் ரிசர்வ் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டை – மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

ஜார்கண்ட் மாநிலத்தில் ரிசர்வ் போலீஸாருடனான துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் பாசிஸ்ட்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது போலீஸாரை நோக்கி மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் டி.ஐ.ஜி பன்காஜ் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version