மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்!

திருவண்ணாமலை மேற்கு மாவட்ட பாமக துணை செயலார் குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன், கலசப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். புதிதாக கழகத்தில் இணைந்தவர்களை கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உற்சாகத்துடன் வரவேற்றார்.

Exit mobile version