நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், ஏராளமான மீனவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், ஏராளமான மீனவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

தமிழகத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மீனவர்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி மாதம் தோறும் நடைபெறுவது வழக்கமான நடைமுறையாகும். அதன்படி ராதாபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடத்தின் கூட்ட அரங்கில் மீனவர்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்தில் இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல், உவரி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தூண்டில் வளைவு அமைத்து, கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Exit mobile version