புதுச்சேரியில் குடும்ப பிரச்சனையில் மனைவி, மகளை கொன்று கூலித்தொழிலாளி தற்கொலை

குடும்ப பிரச்சனையால் மனைவி மற்றும் மகளை கழுத்தறுத்து கொலை செய்த கூலித் தொழிலாளி, தானும் தற்கொலை செய்து கொண்டது புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலகிருஷ்ணன். இவர் உடல்நிலை குறைவு காரணமாக 5 வருடங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை மனைவி வனஜா மற்றும் மகள் தீபா ஆகியோரை கழுத்தறுத்து கொலை செய்த பாலகிருஷ்ணன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்கு சென்ற போது மூவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து காவல்நுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான தீபாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version