உடல் ஒட்டிப் பிறந்த இரட்டை மகள்களை, மழலையர் வகுப்பில் சேர்த்த தந்தை

இங்கிலாந்தில் உடல் ஒட்டிப் பிறந்த இரட்டை மகள்களை மழலையர் வகுப்பில் அவர்களின் தந்தை சேர்த்துள்ளார்.

மேற்கு ஆப்ரிக்க நாடான செனேகலை சேர்ந்த இப்ராகிமா நிடியாயீ என்பவருக்கு உடல் ஒட்டிய குழந்தைகள் பிறந்தன. அண்மையில் குழந்தைகள் இருவரையும் தனித்தனியே பிரிக்க இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். இருவருக்கும் கல்லீரல், சிறுநீர்ப்பை மற்றும் செரிமான உறுப்புகள் ஒன்றாக இருந்ததால் அறுவை சிகிச்சை கைவிடப்பட்டது. இந்தநிலையில், இரண்டு குழந்தைகளும் மழலையர் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version