கார் நிறுத்துமிடத்தில் மிதிவண்டி ஓட்டிய சிறுவன் மீது தாக்குதல்: காவல்துறை வழக்குப்பதிவு

ஐதராபாத்தில் கார் நிறுத்துமிடத்தில் மிதிவண்டி ஓட்டி விளையாடிய 7 வயது சிறுவனை அடித்தவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் சைபராபாத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தளத்தில் உள்ள காலியிடத்தில் சிறுவன் மிதிவண்டி ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்குக் காரை நிறுத்திய கிரந்தி ஸ்வரூப் என்பவர் சிறுவனைத் துரத்தித் துரத்தி அடித்தார். காரை நிறுத்திய பின்னும் விடாமல் சென்று சிறுவனைப் பிடித்து அடித்ததும், மின்தூக்கிக்குள் இழுத்துக் கொண்டு சென்றதும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்துச் சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, தாக்கியவரைத் தேடி வருகின்றனர்.

Exit mobile version