ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் – ஆந்திராவில் பரபரப்பு

விசாகப்பட்டிணத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தாக்கப்பட்டது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில், கூர்மையான ஆயுதத்தால் ஜெகன் மோகன் ரெட்டியை இளைஞர் ஒருவர் தாக்கினார். இதில் அவரது இடது தோளில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ஆந்திர அரசு உரிய பாதுகாப்பு அளிக்காததே தாக்குதலுக்கு காரணம் என ஜெகன் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.

இதனை மறுத்துள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு மாநில அரசு எப்படி பொறுப்பாக முடியும் என கேட்டுள்ளார்.

இதனிடையே தாக்குதல் நடத்திய இளைஞர் ஸ்ரீனிவாஸ் ராவ், ஜெகனின் தீவிர ஆதவாளர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படி இருக்கும் போது, அவர் ஏன் தாக்குதல் நடத்தினார் என்பது மர்மமாக உள்ளது. தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version