பித்தளை நகையை விற்க முயன்ற கர்நாடக மாநிலத்தவர்கள் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் தங்கப்புதையல் எனக் கூறி 2 கிலோ பித்தளை நகையை விற்க முயன்ற கர்நாடகத்தைச் சேர்ந்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கொருக்குப் பேட்டை தியாகராய செட்டி தெருவில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த பீம் பிரகாஷ், அலீஸ் ஆகிய இருவரும் கடை உரிமையாளர் சசிக்குமாரிடம், தாங்கள் தங்கப் புதையல் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பித்தளை நகைகளைக் கொடுத்து அதற்கு 5 லட்ச ரூபாய் பணம் கொடுக்கும் படி கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சசிக்குமார் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், பித்தளை நகைகளைக் கொடுத்து ஏமாற்ற முயன்ற பீம் பிரகாஷ், அலீஸ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version