சென்னையில் வீடு புகுந்து நகை திருடிய நபர், 48 மணி நேரத்தில் கைது

கோயம்பேட்டில் வீடு புகுந்து நகை திருடிய நபர் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் 42 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரும்பாக்கம், ஜெய் நகரை சேர்ந்த கவிதாவின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த 14 பவுன் நகையை திருடிச்சென்றார். இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை செய்தபோது  கவிதா வீட்டின் எதிரே உள்ள மகேந்திரன் என்ற இளைஞர் நகைகளை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 14 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

வெளியூரிலிருந்து வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ள தாம், செலவுக்கு பணம் இல்லாததால் நகை திருடியதாக மகேந்திரன் போலீசாரிடம் கூறியுள்ளான்.

Exit mobile version