அந்தியூர் அருகே ஆயுதப்படை காவலர் மீது தாக்குதல்: வாலிபர் கைது

ஆயுதப்படை காவலரை மூட்டை தூக்கும் கொக்கியால் குத்தி காயப்படுத்திய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு பணி முடித்து விட்டு வீடு திரும்புவதற்காக பேருந்தில் பயணித்து உள்ளார். அதே பேருந்தில் பயணித்த முகமது அலி ஜின்னா, குடிபோதையில் சக பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தட்டிக் கேட்ட காவலர் கார்த்திக்கை, மூட்டை தூக்கும் கொக்கியால் குத்தியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அலி ஜின்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version