பாஜக அரையிறுதி ஆட்டத்திலேயே காணாமல் போய் விட்டதாக மம்தா பானர்ஜி விமர்சனம்

 

அரையிறுதி ஆட்டத்திலேயே பாஜக காணாமல் போய் விட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அமைந்துள்ளது.இது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ட்விட்டரில தொடர்ச்சியாக கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில் மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வெற்றி மக்களின் வெற்றி என்றும் அநீதிக்கு எதிரான ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார்.மேலும் பாஜக அரையிறுதி ஆட்டத்திலேயே காணாமல் போய் விட்டதாக அவர் விமர்சித்துள்ளார். இது 2019-ம் ஆண்டில் நடைபெற உள்ள இறுதி போட்டி எப்படி அமையும் என்பதற்கான உண்மையான ஜனநாயக குறியீடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version