கோர்ட் உத்தரவையடுத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆண்-திருநங்கை திருமணம் அங்கீகரிப்பு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையடுத்து ஆண் மற்றும் திருநங்கை திருமணம் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் அருண்குமார் மற்றும் திருநங்கை ஸ்ரீஜா. இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொண்டு சட்டப்படி பதிவு செய்வதற்காக தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் தமிழக சட்ட விதிமுறைகளின்படி இவர்களின் திருமணத்தை பதிவு செய்ய இயலவில்லை என சார்பதிவாளர் கூறியதாக தெரிகிறது.

இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில், விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், இருவரின் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த இருவரும் தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்து, மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

Exit mobile version