பராமரிப்பு பணி : தஞ்சை மார்க்கமாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக தஞ்சை மார்க்கமாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி – தஞ்சை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் நாளை மற்றும் 10, 17 மற்றும் 24 ஆகிய 4 நாட்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், நெல்லை – மயிலாடுதுறை – நெல்லை இடையேயான பயணிகள் ரயில் மற்றும் திருச்சி – தஞ்சை – திருச்சி இடையே ரயில்கள் இன்று முதல் வருகிற 25-ம் தேதி வரை 20 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Exit mobile version