அடுத்தடுத்து 22 மாணவிகள் புகார்… ஷாக் அடிக்கும் மகரிஷி வித்யா மந்திர் ஆனந்தன் வழக்கு

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதே பள்ளியின் ஆசிரியர் ஆனந்தனை நேற்று கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்ட பிரிவின் கீழ் ஆசிரியர் ஆனந்தன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..

தற்போது ஆசிரியர் ஆனந்தன் மீது மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவிகள் 20 பேர் தங்களுக்கும் ஆசிரியர் ஆனந்தன் பாலியல் தொந்தரவு கொடுத்து போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது..

போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் ஆசிரியர் ஆனந்தனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான 22 மாணவிகளும் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆனந்தன் உள்ளிட்ட பாலியல் தொந்தரவு செய்யும் ஆச்யர்களுக்கு எதிரான பதிவுகள் வலுத்து வருகின்றன.  

Exit mobile version