மகாராஷ்டிராவில் தனியார் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் தானே வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீயை அணைப்பதற்காக ஏராளமான தீயணைப்புத் துறை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளன.

தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தினால் உயிர்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version