தமிழ்நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் நடராஜர் கோவிலில் இசைக் கச்சேரியுடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நாதஸ்வர கச்சேரிகள் அங்கே நடைபெற்றது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தார்கள். அதேபோல சதுரகிரி மலைக்கோவிலிலும் மகா சிவராத்திரி விமர்சையாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் மலையேறுவதற்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

Exit mobile version