ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி ஈஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது. விழாவினையொட்டி கோயில், பலவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதல் நாளில் சுவாமி, ஸ்ரீ பக்த கண்ணப்பா அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வரும் மார்ச் மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Exit mobile version