சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்றுள்ளார். இவரை நீதிபதியாக பதவியில் அமைக்கக்கூடாது என்று 21 நீதிபதிகள் கொலீசியத்திற்கு மனு ஒன்றினை அனுப்பினர். பிறகு அது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் சென்றது. அந்த மனு பிறகு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி பொறுப்பேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து இன்னொரு நீதிபதியாக பாலஜி ராமகிருஷ்ணனும் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் மாவட்ட நீதிபதிகளாக திலகவதி மற்றும் கலைவதி போன்றோர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Exit mobile version