சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை காலி செய்ய வேண்டும் என்ற நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டியவர்கள் 10 மடங்கு மின் கட்டணம் செலுத்த தயாராக இருந்தால் வீட்டை காலி செய்ய பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறினர். மனுதாரர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்ததால், அது பட்டா நிலம் என அறிவிக்கப்பட்டது.

Exit mobile version