நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுது: விவசாயிகள் பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுதானதால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

திருக்கடையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், இரு தினங்களுக்கு முன்னர் நெல் தூற்றும் இயந்திரம் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆன்லைனில் டோக்கன் பெற்று காத்திருந்த விவசாயிகள், நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், நெல் தூற்றும் இயந்திரம் சரி பார்க்கப்பட்ட பின்னர், விவசாயிகள் மீண்டும் ஆன்லைனில் டோக்கன் பெற வேண்டும் என அதிகாரிகள் நிர்பந்தம் செய்ததாக தெரிகிறது.

இதனால், 2 நாட்களாக காத்திருந்த விவசாயிகள், மீண்டும் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version