லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில், பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை செலுத்தப்பட்டது. . பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதத்தை தூண்டிய அம்ரித்பால் சிங் என்பவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் 114பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் புகுந்து அங்கிருந்த மூவர்ண கொடியை அகற்றினர். இந்நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண தேசியக் கொடியை ஏந்தி இந்தியர்கள் மரியாதை செலுத்தினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Exit mobile version