பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை… ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் அதிரடி

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

அரியலூர் மாவட்டம் பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். தனது 15 வயது மகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய வழக்கில் அரியலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி ஆனந்த் சிவலிங்கத்திற்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

மூன்றாயிரம் ரூபாய் அபராதம் கட்டத்தவறினால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Exit mobile version