4-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர் அருகே 4-ம் வகுப்பு பயிலும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த குருவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மலா. கணவர் ரவி இறந்து விட்ட நிலையில் தனது மகளுடன் குருவாயல் திடீர் நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், 4ம் வகுப்பு பயிலும் இவரது மகளை அதேபகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக நிர்மலா அளித்த புகாரின் பேரில் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ஆனந்தனை கைது செய்தனர். இந்த வழக்கில் திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

Exit mobile version