’மருவிய பாலினத்தவர்களின் சுயபாலின அடையாளத்தை மாற்றும் சிகிச்சை தவறானது’ – தேசிய மருத்துவ ஆணையம் கண்டனம்!

மருவிய பாலினத்தவர்களின் சுயபாலின அடையாளத்தை மாற்றும் சிகிச்சையை, மருத்துவ தொழிலின் தவறான நடத்தை என அறிவித்துள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கில், சுயபாலின அடையாளத்தை மாற்றும் சிகிச்சை மருத்துவ தொழிலின் தவறான நடத்தை என்பதை வரைவு விதிகளில் சேர்ப்பது குறித்து, அடுத்த விசாரணையில் விளக்கமளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்தி, அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Exit mobile version