காஷ்மீரில் கடந்த ஓராண்டில் 225 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – ராணுவ அதிகாரி தகவல்

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற தாக்குதலில் 225 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் அரசு மற்றும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை காரணமாக பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் சேர்வது வெகுவாக குறைந்துள்ளதாக வடக்கு மண்டல கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர்சிங் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை 225 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். உள்ளூர் மக்கள் தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்துவருவதை சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு நல்ல செய்தி என்றார்.

காஷ்மீரில் அமைதி நிலவுவதை உறுதி செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகளை ராணுவம் தொடர்ந்து முறியடிக்கும் எனவும் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

Exit mobile version