மதுபாட்டில்களைச் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து -ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து சேதம்

விழுப்புரம் அருகே டாஸ்மாக் மதுப்பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து கடலூர் டாஸ்மாக் குடோனுக்கு சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுப்பாட்டில்களை ஏற்றிக்கொண்டு, சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சென்னை – கும்பகோணம் சாலையில் கப்பியாம்புலியூர் என்ற இடம் அருகே சென்றபோது எதிரே வந்த பேருந்து மீது மோதாமல் இருக்க, லாரியை இடதுபுறமாக திருப்பியுள்ளார்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். தகவல் அறிந்துவந்த காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

Exit mobile version