News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு

Web Team by Web Team
November 29, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு
Share on FacebookShare on Twitter

தமிழர்களைச் சம உரிமையுள்ள குடிமக்களாக நடத்துவதற்கு வழிவகுக்கும் 13ஆவது சட்டத் திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தும் என நம்புவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தினார். இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடைபெற்றது. அதன்பின் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் இலங்கையுடனான உறவுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார். பயங்கரவாதச் செயல்களை இந்தியா எப்போதும் கண்டித்து வருவதுடன், அதற்கு எதிராகப் போராடியும் வருவதாக மோடி குறிப்பிட்டார். தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கைக்கு இந்தியா 360 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கும் எனவும் மோடி தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இரண்டாயிரத்து 870 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக ஏற்கெனவே 46 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுத்துள்ள நிலையில் மேலும் 14 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார். இலங்கையில் சூரிய ஒளி மின் திட்டத்துக்காக இந்தியா 720 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கும் எனவும் தெரிவித்தார். தமிழர்களின் சமத்துவம், நீதி, சமாதானம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் 13ஆவது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதன் பின்பு, கூட்டறிக்கையின்போது பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, தமிழக மீனவர்களின் பிரச்சனை பற்றிப் பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார். இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோத்தபய ராஜபக்ச தெரிவித்தார்.

Tags: Lanka Chancellor Gotabhaya Rajapaksanarendra modinewsj
Previous Post

ராதாபுரம் தேர்தல் வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு

Next Post

சென்செக்ஸ் நானூறு புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி

Related Posts

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
edappadi k palanisamy
அரசியல்

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்தம் படத்திற்கு மலர்தூவி மரியாதை!

September 5, 2022
Next Post
சென்செக்ஸ் நானூறு புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி

சென்செக்ஸ் நானூறு புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி

Discussion about this post

அண்மை செய்திகள்

துருக்கியில் இறப்பு எண்ணிக்கை 15000த்தை தாண்டியது!

துருக்கியில் இறப்பு எண்ணிக்கை 15000த்தை தாண்டியது!

February 9, 2023
குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் !

குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் !

February 9, 2023
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!

February 9, 2023
பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு பிறந்த குழந்தை!

பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு பிறந்த குழந்தை!

February 9, 2023
கர்ப்பப்பை எடுத்தா தான் உயிர் பிழைக்க முடியும்னு சொல்லிட்டாங்க!

கர்ப்பப்பை எடுத்தா தான் உயிர் பிழைக்க முடியும்னு சொல்லிட்டாங்க!

February 9, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version