தனியார் ஆக்கிரமித்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்ட வருவாய் துறையினர்

திருவள்ளூர்அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிக்கு புகார் வந்தது.விசாரனையில் அரசுக்குச் சொந்தமான 20 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கரை ஏக்கர் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வாழைத்தோப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி முன்னிலையில் வருவாய் அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டனர். மேலும், அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் தானாக முன்வந்து அரசிடம் ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version