லால்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கழுதை பால் விற்பனை அமோகம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு நோய்களை தீர்ப்பதாக கூறி கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

லால்குடி அருகே உள்ள கீரமங்கலம்,தாளக்குடி, வாளக்கட்டை, முத்தமிழ் நகர்,கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நோய்களை தீர்ப்பதாக கூறி கழுதைப்பால் விற்பனை செய்து வருகிறார் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி. வீடு, வீடாகச் சென்று கழுதைப்பாலை அவ்வப்போது கறந்து ஒரு சங்கு 50 ரூபாய் என விற்பனை செய்து வருகிறார். பிறந்த ஆறு மாத குழந்தை முதல் அனைவரும் இந்த பாலை குடிப்பதால்,குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, மஞ்சள் காமாலை நோய், ஜீரண சக்தி, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வராது என கூறுவதால் இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர்.

Exit mobile version