குமாரபாளையத்தில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா -அமைச்சர் தங்கமணி பங்கேற்பு

குமாரபாளையம்-ஆனங்கூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் புதிய போக்குவரத்து காவல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு காவல்நிலையத்தை திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டம் பச்சாம்பாளையம் சிமெண்ட் ஆலையில் இருந்து காவிரி ஆற்று பாலம் வரை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கோட்டைமேடு பகுதியில் புதிய மேம்பாலம் விரைவில் கட்டப்படும் என்று அவர் கூறினார்.

Exit mobile version