கொங்கு சமுதாயத்தினர் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு

கொங்கு சமுதாயத்தை சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கொங்கு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முதலமைச்சரை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு பருத்தி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் முதல்வரை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர், அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Exit mobile version