சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியை, சிகரெட் பற்ற வைப்பதுடன் ஒப்பிட்டு,
திமுக அமைச்சர் கே.என் நேரு பேசியது மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.YouTube video player

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு கட்டடம் திறப்பு விழாவில் திமுக அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது குத்துவிளக்கு ஏற்றுவதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மெழுகுவர்த்தி வைத்திருந்த போது, அதனை செவிலியர் ஒருவர் பற்றவைக்க முயற்சி செய்தார். பலமுறை முயற்சி செய்தும் சரியாக பற்ற வைக்க முடியாததால், அருகில் நின்று கொண்டிருந்த அமைச்சர் கே.என். நேரு, செவிலியர் இடமிருந்து தீப்பெட்டியை வாங்கி, தான் நிறைய முறை சிகரெட் பற்ற வைத்திருக்கிறேன் என்று கூறிக்கொண்டே மெழுகுவர்த்தியை பற்ற வைத்தார். இதனைக்கேட்ட அங்கிருந்த மக்கள் முகம் சுழித்துச் சென்றனர். மத உணர்வை புண்படுத்தும் நோக்கில் பேசிய திமுக அமைச்சர் கே.என்.நேருவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

Exit mobile version