சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2 – கொல்லப்பட்ட தீவிரவாதிகள்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று ( 26.02.2019 ) அதிகாலை 4.00 மணியளவில் பாகிஸ்தானின் முசாபர்பாத் பகுதியில் எல்லைக்கோட்டை கடந்து இந்தியா ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மறைவிட கட்டுப்பாடு முகாம்களை தாக்கி அழித்தது.

இந்த தாக்குதல் புல்வாமா தாக்குதலுக்கு காரணமாயிருந்த தீவிரவாதிகளை ஒழிக்கத்தான் என்றும் , பாரத நாட்டை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் பிரதமர் மோடி ராஜஸ்தான் சுரூ வில் முழங்கினார்.

இந்நிலையில், ஏ என் ஐ தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி,

இன்று கொல்லப்பட்ட முக்கியத் தீவிரவாதிகளின் படத்தை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

இவர் மௌலானா அம்மார் (Maulana Ammar ) ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீர் தாக்குதல்களில் உடனிருந்தவர்.

 

மௌலானா தல்ஹா சாய்ஃப் ( Maulana Talha Saif ) இவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான மௌலானா மசூத் ஆசாரின் சகோதரர் மற்றும் ஜெய்ஷ் இ முகமது ஆயத்தப்பிரிவின் தலைவருமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஃப்டி அசார் கான் ( Mufti azar khan )காஷ்மீர் தாக்குதல்களில் திட்டவடிவு செய்தவர்களில் இவரும் ஒருவர்.

இவர் இப்ராஹிம் அசார் ( Ibrahim azhar ) மசூத் ஆசாரின் மூத்த சகோதரர். மேலும் ஐசி-814 விமானக்கடத்தலின் முக்கியப் புள்ளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் முக்கிய தீவிரவாதிகள் பலரும் இறந்திருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version