சபரிமலையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் அகற்றப்படும் சூழல் உருவாகும் – கேரள முதலமைச்சர் எச்சரிக்கை

சபரிமலை ஐயப்பன் கோவிலின் தனித்தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் கலவரத்தை ஏற்படுத்த முயல்வதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். 

சபரிமலை விவகாரம் குறித்து முகநூலில் பதிவிட்டிருக்கும் அவர், எந்த மதத்தை சேர்ந்தவரும் வழிப்பட கூடிய சபரிமலையின் தனித்தன்மையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சபரிமலையை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். முயல்வதாக குற்றஞ்சாட்டியிருக்கும் முதலமைச்சர் பினராயி விஜயன், சாதி மேலாதிக்கத்தை நிறுவும் நோக்குடன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செயல்படுவதாக புகார் கூறியுள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால் சபரிமலையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் அகற்றப்படும் சூழல் உருவாகும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version