கேரள முதலமைச்சர் வீட்டின் முன் பா.ஜ.க வினர் போராட்டம்

கேரளாவில், முதலமைச்சரின் இல்லத்தின் முன், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின், அங்கு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் உச்ச கட்டமாக, திருவனந்தபுரத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இல்லத்தின் முன், பா.ஜ.க வினர் போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களை கலைக்க, தண்ணீரை பீய்ச்சி அடித்த போலீசார், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.

Exit mobile version