காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கேரளா முதலமைச்சர் கடிதம்

நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

வயநாட்டில் விவசாயி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என ராகுலுக்கு கேரளா முதல்வர் பினராய் விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயிகளை கடனில் இருந்து மீட்க பினாரயி விஜயனுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து விவசாயிகளின் கடன்கள் வசூலிப்பதை டிசம்பர் 31ஆம் வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக கேரளா முதலமைச்சர், ராகுலுக்கு எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version