News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பழந்தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் கீழடி

Web Team by Web Team
October 3, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம், வீடியோ
Reading Time: 1 min read
0
பழந்தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் கீழடி
Share on FacebookShare on Twitter

பழந்தமிழரின் பெருமையை உலகறியச் செய்துள்ள கீழடியில் இருந்து நாளுக்கு நாள் பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கீழடி கிராமத்தில் தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இங்கு இதுவரை, மத்திய தொல்லியல் துறை 3 கட்டமும், மாநில அரசு 1 கட்டமும் என, 4 கட்ட அகழ்வாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது, ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

மத்திய தொல்லியல் துறை 3 கட்டமாக நடத்திய அகழ்வாய்வில் 7,818 பொருட்களும், மாநில அரசு நடத்திய அகழ்வாய்வில் 6 தங்க பொருட்கள் உட்பட 5,820 பொருட்களும் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது நடந்துவரும், ஐந்தாவது கட்ட அகழ்வாராய்ச்சியில் இதுவரை 52 குழிகள் தோண்டப்பட்டு 850க்கும் அதிகமான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அணிகலன்கள், பானை ஓடுகள், சமையலறைகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், சதுர வடிவில் செங்கற்களால் ஆன அமைப்பு, சுடுமண் பொம்மைகள், மதில் சுவர்கள், உறை கிணறுகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பானை ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள், மீன் போன்ற உருவங்கள் காணப்படுவதோடு, எலும்பினால் செய்யப்பட்ட பொருட்களும், பன்றி உருவம் பொறித்த கிண்ணமும் கிடைத்துள்ளன.

இந்த ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் சுமார் 110 பணியாளர்களும், 11 அகழ்வாராய்ச்சி மாணவர்கள் உட்பட மூன்று அகழ்வராய்ச்சி அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கீழடியைப் பார்வையிட தற்போது பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதி வருவதால் அங்கு திடீர் உணவகங்களும் முளைத்துள்ளன.

கடந்த சில நாட்களாகவே இங்கு மூவாயிரத்திலிருந்து 4 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது அவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

கீழடியைப் பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில், சுமார் 30 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோண்டத் தோண்ட தமிழர்களின் தொன்மையை உலகிற்கு வெளிபடுத்திக் கொண்டிருக்கும் கீழடி அகழாய்வானது, இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது…

Tags: கீழடிமத்திய தொல்லியல் துறை
Previous Post

சிலம்பாட்டத்தில் உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்

Next Post

யுனெஸ்கோ விருது பெற்ற ஸ்ரீரங்கம் திருக்கோயில்: சிறப்பு தொகுப்பு

Related Posts

தமிழக கோயில்களை மத்திய தொல்லியல் துறை கேட்கவில்லை: அமைச்சர் பாண்டியராஜன்
TopNews

தமிழக கோயில்களை மத்திய தொல்லியல் துறை கேட்கவில்லை: அமைச்சர் பாண்டியராஜன்

March 5, 2020
கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட்ட நீதிபதி
TopNews

கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட்ட நீதிபதி

November 6, 2019
கீழடி உள்பட 4 இடங்களில் அகழ்வாய்வு பணிகளுக்கு அனுமதி: மத்திய அரசு
TopNews

கீழடி உள்பட 4 இடங்களில் அகழ்வாய்வு பணிகளுக்கு அனுமதி: மத்திய அரசு

October 25, 2019
ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியை பர்வையிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
TopNews

ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியை பர்வையிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

October 3, 2019
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர்
TopNews

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர்

September 22, 2019
தமிழர் நாகரிகம் பழமையான நாகரிகம் என்பதை நிரூபித்த கீழடி ஆதாரங்கள்
TopNews

தமிழர் நாகரிகம் பழமையான நாகரிகம் என்பதை நிரூபித்த கீழடி ஆதாரங்கள்

September 21, 2019
Next Post
யுனெஸ்கோ விருது பெற்ற ஸ்ரீரங்கம் திருக்கோயில்: சிறப்பு தொகுப்பு

யுனெஸ்கோ விருது பெற்ற ஸ்ரீரங்கம் திருக்கோயில்: சிறப்பு தொகுப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

ஜி20 மாநாடு என்றால் என்ன?

ஜி20 மாநாடு என்றால் என்ன?

January 31, 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் !

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் !

January 31, 2023
லட்சத்தீவு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து!

லட்சத்தீவு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து!

January 31, 2023
பொங்கல் பரிசு தொகை! அரசின் கஜானாவுக்கே திரும்பி சென்றுள்ளது.

பொங்கல் பரிசு தொகை! அரசின் கஜானாவுக்கே திரும்பி சென்றுள்ளது.

January 31, 2023
திமுக மேயருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே வாக்குவாதம்!

திமுக மேயருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே வாக்குவாதம்!

January 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version