நாட்டையே உலுக்கிய ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா மறுமணம்

நாட்டையே உலுக்கிய ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா இன்று மறுமணம் செய்துக் கொண்டார். உடுமலையை சேர்ந்த சங்கரும் பழனியை சேர்ந்த கவுசல்யாவும் கடந்த 2016ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் குடும்பத்தினர் கவுசல்யா மற்றும் சங்கரை அரிவாளால் கொடூரமாக வெட்டினர்.

இதில் சங்கர் உயிரிழந்தார், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கவுசல்யா தனது கணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடினார்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் கோவையை சேர்ந்த பறை இசை கலைஞர் சக்தியை கவுசல்யா மறுமணம் செய்துள்ளார். கோவையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற மறுமண நிகழ்வில் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Exit mobile version