கவுண்டா நதியில் தூர்வாரும் பணி – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார்

திருமங்கலம் அருகே சௌடார்பட்டி முதல், திரளி கிராமம் வரை கவுண்டா நதியில் தூர்வாரும் பணியினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் விவசாய பாசனத்திற்கு வரும் முக்கியமான நதி கவுண்டாநதி. இந்த நதி பல ஆண்டுகள் தூர்வராமல் விவசாயிகள் பரிதவித்து வந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு ஆணைக்கிணங்க, அனைத்து நதி மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருமங்கலம் பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி, கவுண்டாநதியை தூர்வாரும் பணியினை அமைச்சர் ஆர் பி உதயகுமார் துவக்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version