"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை தருவதே நியாயம்" – மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை தருவதுதான் நியாயம் என்றும், இல்லை என்றால் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை தருவதுதான் நியாயம் என்றும் தவறினால், ஜனநாயகம் கேள்விக்குறியாகி விடும் என்று தம்பிதுரை தெரிவித்தார்.

Exit mobile version