ஆமா இது கருணாநிதிக்கு சரியான காணிக்கை தான்!

சென்னை கலைவாணர் அரங்கத்துல நடந்த கருணாநிதி நூற்றாண்டு தொடர்பான விழாவுல ஸ்டாலின் பேசும்போது எனது தலைமையிலான திராவிட மாடல் அரசையே கருணாநிதிக்கும் அவரது புகழுக்கும் நான் காணிக்கையாக்குகிறேன்னு சொல்லியிருக்காரு.

ஸ்டாலினோட திராவிட மாடல் ஆட்சியில தான் ஆவின் பால் விலை உயர்வு, மின்சாரம், குடிநீர், சொத்துவரி கட்டணம் எல்லாம் உயர்ந்ததுன்னு பொதுமக்கள் இன்னும் வேதனையோட இருக்காங்க. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் எல்லாம் தங்கு தடையின்றி விற்பனையாகிக்கிட்டு இருக்கு. கொலை, கொள்ளை, கூட்டுப் பாலியல் வன்கொடுமைனு சமூக விரோதச் செயல்கள் எல்லாம் அரங்கேறிக்கிட்டு இருக்கு.. எல்லாத்துக்கும் மேல விஷச்சாராய சாவுகளும் நடந்து 20க்கும் மேற்பட்ட உயிர்கள் எல்லாம் பலியாகி இருக்கு.. இப்படி தமிழக மக்களுக்கு விடிவே இல்லாம நடந்துக்கிட்டு இருக்கிற திராவிட மாடல் ஆட்சியத்தான், ஸ்டாலின் அவரோட அப்பாவுக்கு காணிக்கை ஆக்குறாரான்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசுறாங்க.

Exit mobile version