மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

மேகேதாட்டு விவகாரத்தில் உரிய முடிவு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 11ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து மேகேதாட்டு விவகாரத்தை கையில் ஏந்தி, தமிழக அதிமுக எம்.பி.க்கள் மற்றும் கர்நாடக எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, மேகேதாட்டு விவகாரத்தில் உரிய முடிவு எட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு கர்நாடக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேகேதாட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், தங்களுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். எனவே மேகேதாட்டு அணை கட்டப்பட வேண்டும் என்றும் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version