கடந்த 2ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மீனவர் மாயம்

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பப்பட்டணம் துறைமுகத்திலிருந்து, நாட்டு படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர், நான்காவது நாளாக கரை திரும்பாத நிலையில், அவரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இனையம் சின்னத்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் நெல்சன், அமல்ராஜ் ஆகியோர், கடந்த 2-ம் தேதி தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றனர்.அப்போது வீசிய காற்றில் அமல்ராஜ் தடுமாறி தண்ணீரில் விழுந்ததாக கூறப்படுகிறது. கரை திரும்பிய நெல்சன் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் நான்காவது நாளாக அமல்ராஜை தேடி வருகின்றனர். ஆனால், அவர் இன்னும் கிடைக்காததால், உடனே கடலோர காவல் துறை உதவியுடன் மாயமான மீனவரை விரைந்து மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version