இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க திரையுலகினர் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ 

இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க திரையுலகினர் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தி உள்ளார்.

சென்னை வடபழனியில் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் ஒருமைப்பாடு தின கூட்டம் நடைபெற்றது. இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ் ராக்கர்ஸை ஒழிப்பது மிகவும் சவாலாக இருக்கிறது என்று கூறினார். இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க திரையுலகினர் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் களமிறங்கினால் மட்டுமே தமிழ் ராக்கர்ஸ் பக்கத்தை மொத்தமாக முடக்க முடியும் என்று கூறினார்.

 

 

Exit mobile version