ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்த கபடி போட்டி

தேமுதிகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தையானது விரைவில் சுமூகமான சூழ்நிலையை எட்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என 300 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுகவை போல அதிமுக கூட்டணியை தேடி செல்லவில்லை என்றும், திமுக மற்ற கட்சிகளை சமாதானப்படுத்தி கூட்டணி சேர்த்துக்கொண்டிருப்பதாக கூறினார். தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தமிழக முதலமைச்சர் நடத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், தேமுதிகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்து கொண்டிருப்பதாகவும், விரைவில் சுமுகமான சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version