ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தடாகத்தில் கபடிப் போட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தடாகத்தில் நடைபெற்ற கபடிப் போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் தடாகம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் பொள்ளாச்சி அணி கோப்பையை தட்டிச் சென்றது.

வெற்றி பெற்ற அணிக்கு கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர் தடாகம் பகுதி இளைஞர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று கபடிப் போட்டி நடத்தியதன் மூலம் கிராமத்திற்கு பெருமை தேடி தந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

Exit mobile version