நாராயணசாமி நாயுடு நினைவு தினத்தை முன்னிட்டு ஜோதி தொடர் ஓட்டம்

மறைந்த விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் இருந்து நினைவு ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியது. உழவர் பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட நாராயணசாமி நாயுடு, விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, பாரதிய கிசான் சங்கம் சார்பில் நினைவு தொடர் ஜோதி ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோவில்பட்டி பயணியர் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாராயணசாமி நாயுடுவின் உருவப்படத்திற்கு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் பின்னர், ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியது. சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, திண்டுக்கல், பழனி வழியாக நாராயணசாமி நாயுடுவின் சொந்த ஊரான வையம் பாளையத்தில், தொடர் ஜோதி ஓட்டம் நிறைவடைகிறது.

Exit mobile version