உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்கப்போகும் நீதிபதிகள் யார்? யார்? – பட்டியல் வெளியீடு

உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அடுத்த மூன்று மாதங்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 5 ஆம் தேதி முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அடங்கிய முதல் அமர்வு பொதுநலன் வழக்குகளையும், ரிட் மேல்முறையீடு மனுக்களை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வும் விசாரிக்கும். அதேபோல், ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு மனுக்களையும் இந்த அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வி, நில சீர்த்திருத்தம் உள்ளிட்ட நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகளை நீதிபதி எஸ்.வைத்தியநாதனும், 2015-ல் இருந்து நிலுவையில் இருக்கும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்கள் உள்பட்ட சீராய்வு மனுக்களை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் கோவிந்தராஜ், நிஷாபானு உள்பட்ட மேலும் 9 நீதிபதிகள், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Exit mobile version