5 ரூபாய் மருத்துவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்க வேண்டும்: நீதிபதி வேண்டுகோள்

வடசென்னையில் மறைந்த 5 ரூபாய் மருத்துவர் டாக்டர். ஜெயச்சந்திரனுக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்க வேண்டுமென நீதிபதி கிருபாகரன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடசென்னையில் கடந்த 41 ஆண்டுகளாக ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்கள் மருத்துவர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் டாக்டர்.ஜெயச்சந்திரன். கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில், டாக்டர். ஜெயசந்திரனின் 72-வது பிறந்தநாள் விழா, தண்டையார்பேட்டையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், டாக்டர் ஜெயச்சந்திரன் சாரிடபிள் என்ற டிரஸ்ட்டை துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து விழாவில் பேசிய அவர், தானும் 1980 ஆம் ஆண்டுகளில் டாக்டர். ஜெயசந்திரனிடம் மருத்துவம் பார்த்ததாக நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்க வேண்டுமெனவும் மத்திய அரசுக்கு நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version