ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவும் சேவை கட்டணத்தை உயர்த்த முடிவு

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் சேவைக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.

கடந்த காலாண்டில் கடும் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் சேவை கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்தது. இதனையடுத்து, ஜியோ நிறுவனமும் சேவை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இது குறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மற்ற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களைப் போல், தங்கள் நிறுவனமும் கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி உள்ளது. மேலும் அடுத்த சில வாரங்களில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என்றும், இது தொடர்பாக தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ட்ராயுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு, இணையதள பயன்பாடு மற்றும், டிஜிட்டல் மய வளர்ச்சியை பாதிக்காத வகையில் அமையும் என தெரிவித்துள்ளது..

Exit mobile version